தம்பியை கொலை செய்து கபட நாடகம்.. தீவிர விசாரணையில் காவல் துறை.!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் குடும்பத்தினருடன் வசித்து வந்த நபர் சுரேந்தர் குமார். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக, வீட்டில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவருக்கு நீண்ட நாட்களாக நுரையீரல் தொற்று இருந்து வந்த நிலையில், நுரையீரல் தொற்றால் இவர் உயிரிழந்துள்ளார் என்று குடும்பத்தினர் கூறியுள்ளனர். 

இவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர், இவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இவருக்கு தீவிர நுரையீரல் தொற்று இருந்தது என்ற காரணத்தால், காவல் துறையினர் நோயால் இறந்திருக்கலாம் என்று இருந்துள்ளனர். 

இந்நிலையில், பிரேத பரிசோதனையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகவே, சுரேந்தரை அவரது அண்ணனே அடித்து கொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. சுரேந்தரின் அண்ணனை கைது செய்த காவல் துறையினர், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Murder police Investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->