மீண்டும் ஆன்லைன் வகுப்புகளை நோக்கி டெல்லி...! - பள்ளிகள் அதிரடி முடிவு...!
Delhi moving towards online classes again Schools take drastic decision
உலகம் முழுவதும் உருவாகியுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் சர்வதேச சந்தைகளில் நிலவும் பொருளாதார அதிர்வுகள் காரணமாக, பல நாடுகளில் எரிபொருள் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் தாக்கம் இந்தியாவிலும் தீவிரமாக பிரதிபலித்து வருகிறது. சமீபத்தில் வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்ட நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளையும் அதிகரிப்பது தொடர்பான ஆலோசனைகள் மத்திய மட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து உயர்ந்து வரும் எரிபொருள் செலவினம் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் கூடுதல் சுமையை ஏற்படுத்தி வரும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, மக்கள் தனிப்பட்ட வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து, அதிகளவில் பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படும் நிறுவனங்கள், தங்களது பணியாளர்களை முடிந்தவரை வீட்டிலிருந்தே பணியாற்ற ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதோடு, நகரங்களில் போக்குவரத்து நெரிசலையும் கட்டுப்படுத்த முடியும் என கருதப்படுகிறது.அதேபோல், பள்ளி மற்றும் கல்லூரிகளும் இணையவழி கல்வி முறையை விரிவுபடுத்தும் வாய்ப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தேசிய தலைநகர் பிராந்திய நகரங்களில் செயல்படும் கல்வி நிறுவனங்கள், மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளை மீண்டும் செயல்படுத்துவது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.
இதனுடன், பல தனியார் நிறுவனங்களும் வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்துவதற்கான தொடக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எரிபொருள் விலை ஏற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் சிக்கனப் பயணமும் மாற்று பணிமுறைகளும் மீண்டும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.
English Summary
Delhi moving towards online classes again Schools take drastic decision