இரண்டு மாதத்தில் 9 நிலநடுக்கம்.. அதிர்ச்சியில் டெல்லி மக்கள்.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலநடுக்கமானது, இந்தியாவிலும் தற்போது தலைதூக்க துவங்கியுள்ளது. டெக்டானிக் பிளேட்டுகள் என்று அறியப்படும் நிலநடுத்தட்டு நகர்ந்து மோதிக்கொள்ளும் விளைவில் நிலநடுக்கம் ஏற்படுகிறது. 

எரிமலை குழம்புகள் பூமிக்கடியில் இன்னும் சிறிது சிறிதாக டெக்டானிக் தட்டுகள் வழியாக தனது பாதிப்பை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் பல நிலநடுக்கமும் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், இந்தியாவில் மும்பை மற்றும் டெல்லி பகுதிகளில் நிலநடுக்கம் தொடர்கதையாகியுள்ளது. தற்போது இன்று மதியம் உள்ளூர் நேரப்படி 1.33 மணியளவில் டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

டெல்லியில் உள்ள குருகிராம் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 2.1 ஆக பதிவாகியுள்ளது என்று பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது. குறுகிராம் தலைநகர் டெல்லியில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், சிறிய அளவிலான நிலநடுக்கமாக இது இருந்தாலும், கடந்த 2 மாதங்களில் 9 வது நிலநடுக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi earthquake today and 9 th quake of past 2 months


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->