நீதிமன்றத்திலேயே பெண்மணி பாலியல் பலாத்காரம்..!! காவல் நிலையத்தில் கண்ணீர் புகார்.!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் இருக்கும் ரோஸ் அவெனியூவில் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றமானது செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றத்தில் பழைய டெல்லி பகுதியை சார்ந்த 30 வயது பெண்மணி பணியாற்றி வருகிறார். இவருக்கு நீதிமன்ற ஊழியரான கல்யாணபுரி பகுதியை சார்ந்த ராஜேந்தர் சிங் என்பவருக்கும் நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

பெண்மணி நட்புடன் பழகி வந்த நிலையில், பழக துவங்கிய நாட்களில் இருந்து பெண்மணியை காமுக எண்ணத்தில் நெருங்க நினைத்த கொடூரன், தனிமையில் சந்திக்க பல முறை வற்புறுத்தி வந்துள்ளான். 

ஒரு சமயத்திற்கு மேல் பொறுமையை இழந்த பெண்மணி, இறுதியாக சந்தித்து எச்சரித்துவிட்டு நட்பை முறித்துக்கொள்ளலாம் என்று அங்குள்ள நீதிமன்ற வளாகத்திற்கு சென்ற நிலையில், கொரோனா பரவளின் காரணமாக நீதிமன்றத்தில் யாரும் இல்லை. 

இதனை தனக்கு சதாகமாக பயன்படுத்திக்கொண்ட காமுகன், பெண்மணியை நீதிமன்ற அறைக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இந்த விஷயம் தொடர்பாக பெண்மணி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பெண் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Delhi CBI Court Campus girl sexual abuse police investigation


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->