டெல்லி | அதிகாலையில் இடிந்து விழுந்த கட்டிடம்: 2 பேர் பரிதாப பலி.!  - Seithipunal
Seithipunal


புதுடெல்லியில் இன்று அதிகாலை 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

டெல்லி, கபீர் பகுதியில் உள்ள பழைய இரண்டு மாடி கட்டிடத்தின் முதல் தளம் காலியாகவும் தரை தளத்தில் ஆடை தயாரிப்புகளையும் செயல்பட்டு வந்தது. 

இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தரைத்தளத்தில் உள்ள கடையில் பணியாற்றி வந்த இரண்டு தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். 

மேலும் ஒரு இளைஞர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் இடிபாடுகளில் வேறு யாராவது சிக்கி கொண்டுள்ளார்களா என தீவிரமாக தேடி வருகின்றனர். 

இதனை தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கட்டிடத்தின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Delhi building collapsed 2 people died


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->