நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு பதவி நீக்க தீர்மானம்: அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆலோசனை..! - Seithipunal
Seithipunal


அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, வரும் பாராளுமன்ற  கூட்டத் தொடரில், அவரை பதவியில் இருந்து நீக்க தீர்மானத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, அனைத்து கட்சிகளுடன் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்கும் யஷ்வந்த் வர்மா, இதற்கு முன் டில்லி ஐஉயர்நீதிமன்றத்தில்  நீதிபதியாக பணியாற்றியவர். கடந்த மார்ச் 14-இல், டில்லியில் உள்ள நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்ட போது, எரிந்த நிலையில், 500 ரூபாய் நோட்டு கட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 'இந்த பணத்துக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என, நீதிபதி யஷ்வந்த் வர்மா கூறியிருந்தார். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்து, அப்போதைய உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உத்தரவிட்டார். குறித்த குழுவினர் நடத்திய விசாரணையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றம் நிரூபணமானது.

இதையடுத்து, நீதிபதி பதவியை ராஜினாமா செய்யும்படி, யஷ்வந்த் வர்மாவை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. ஆனால் முரண்டு பிடித்தார். இதனால் அதிருப்தி அடைந்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, விசாரணை குழுவின் அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்தார். இதனையடுத்து யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்தை தாக்கல் செய்ய முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், பாராளுமன்ற மழை கால கூட்டத்தொடருக்கு முன்னாள் யஷ்வந்த் வர்மா ராஜினாமா செய்யாவிட்டால், அவருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர உள்ளது.

நீதித்துறையின் ஒருமைப்பாட்டையும், நீதி அமைப்பு மீது மக்களின் நம்பிக்கையை உறுதி செய்யவும் இந்த முடிவு எடுத்துள்ளது. பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Decision to remove Judge Yashwant Verma Minister Kiren Rijiju advises


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->