'சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் கோயில் தந்திரிக்கு எதிராக சாட்சியமில்லை'; குற்றவியல் நீதிமன்றம்..!
Criminal Justice Ministry says there is no evidence against temple priest in Sabarimala gold theft case
கேரளா சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு தொடர்பான 02 வழக்குகளில் கோயில் தந்திரியான கண்டரரு ராஜீவரு கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ராஜீவருவின் ஜாமீன் மனு மீதான விசாரணை கொல்லம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. குறித்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. வழக்கு விசாரணையின்போது தந்திரியின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் பேசுகையில் கூறியதாவது;
'உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 2018-இல் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைந்து தரிசனம் செய்ய கேரள மாநில அரசு அனுமதித்தது. அதற்கு அப்போது கண்டரரு ராஜீவரு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தங்கத் திருட்டு வழக்கை கேரள அரசு அதிகாரிகள் தொடர்ந்துள்ளனர்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த வழக்கு விசாரணையில், கண்டரரு ராஜீவருக்கு எதிராக எந்தச் சாட்சியமும் இல்லை என்று கொல்லம் குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், அவரை வேண்டுமென்றே கேரள போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தியதாகவும், இது பழி வாங்கும் நடவடிக்கை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
அத்துடன், இந்த தங்கம் திருட்டு வழக்கில் முன்னாள் தேவஸ்வம் போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் சம்பந்தப்பட்டுள்ளார். அதை திசை திருப்பவே தந்திரி கண்டரரு ராஜீவருவை கேரள போலீஸார் கைது செய்துள்ளதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
மேலும், கண்டரரு ராஜீவருவை கைது செய்தது தொடர்பாக கேரள அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
English Summary
Criminal Justice Ministry says there is no evidence against temple priest in Sabarimala gold theft case