சட்டவிரோதமாக வாக்காளர் அடையாள அட்டைகளை விநியோகித்த காங்கிரஸ் தலைவர் மீது பாய்ந்த வழக்கு! - Seithipunal
Seithipunal


ஹைதராபாத்தில் சட்டவிரோதமாக வாக்காளர் அடையாள அட்டைகளை விநியோகித்ததாக காங்கிரஸ் தலைவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வரும் நவம்பர் 11ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் வாக்காளர் அட்டைகள் பகிரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பாஜக உறுப்பினர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் மதுரா நகர காவல் நிலையத்தில் வி. நவீன் யாதவ் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்ததாகக் கூறப்படுவதுடன், தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாஜக எம்.பி. ரகுநந்தன் ராவ், இந்த குற்றச்சாட்டை தெலங்கானா தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் எழுத்துப் பூர்வமாக தெரிவித்திருந்தார். தேர்தல் ஆணையத்தின் விதிப்படி, வாக்காளர் அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கான அதிகாரம் வாக்குச்சாவடி நிலை அதிகாரியிடம் மட்டுமே இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அதேசமயம், சட்டவிரோதமாக நடைபெற்றதாகக் கூறப்படும் அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், காங்கிரஸ் தலைவர் வி. நவீன் யாதவ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress leader distributing fake Voter ID cards


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->