12 மணி நேரம் மூடப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவில் - காரணம் என்ன?
coming septembar 7 thirupathi temple gate close for lunar eclipse
வருகின்ற ஏழாம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி கோவில் நடை மூடப்படுகிறது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பொதுவாக கிரகண காலங்களில் கோவிலின் கதவுகள் மூடப்படுவது வழக்கம். இந்த நிலையில், அடுத்த மாதம் 7-ந்தேதி இரவு 9.50 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பித்து, மறுநாள் அதிகாலை 1.31 மணிக்கு நிறைவடைகிறது.

இந்த கிரகண நிகழ்வையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் வருகிற 7-ந்தேதி மாலை 3 மணி முதல் மறுநாள் அதிகாலை 3 மணி வரை சுமார் 12 மணி நேரம் மூடப்படும் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுநாள் 8-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதம் மூலம் கோவில் கதவுகள் திறந்து கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்படும்.
பின்னர் புண்யாஹாவசனம், தோமாலை சேவை, பஞ்சாங்க ஸ்ரவணம், அர்ச்சனை சேவை ஆகியவை நடைபெறும். காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்" என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
English Summary
coming septembar 7 thirupathi temple gate close for lunar eclipse