மயங்கி விழுந்து உயிரிழந்த கல்லூரி மாணவி - பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


மயங்கி விழுந்து உயிரிழந்த கல்லூரி மாணவி - பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

கர்நாடக மாநிலத்தில் உள்ள தட்சிண கன்னடா மாவட்டத்தில் நெரியா பகுதியை சேர்ந்தவர் சுமா. மங்களூருவில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர் உடல் நலக்குறைவால் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இவருக்கு கடந்த 9-ம் தேதி மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதனால் உள்ளூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். இதையடுத்து மீண்டும் சுமாவுக்கு கடந்த 11-ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பினார்.
 

இந்த நிலையில் நேற்று முன்தினம் சுமா தனது வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், சுமாவை  அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுமா ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம்குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக 6 மாணவ, மாணவிகள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college student died for heart attack in karnataga


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->