மதுக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சிறுவர்கள்!
Children hurl petrol bomb at liquor store
கேரளாவில் மதுக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய புலம்பரம் பகுதியை சேர்ந்த 3 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 சிறுவர்களும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அனுமதிக்கப்பட்டனர்.
புதுச்சேரி போன்ற மாநிலங்களில் சமீபகாலமாக ஓசியில் மது கேட்டு தரவில்லை என்றால் மதுக்கடையில் தகராறு செய்து ரகளையில் ஈடுபடும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்றுத்தான் வருகிறது.குறிப்பாக ஒரு சில கும்பல் மது கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.அதுபோன்ற சம்பவம் ஒன்றுதான் கேரளாவிலும் நடைபெற்றுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் சம்ரவட்டம் பகுதியில் இருந்த மதுக்கடை ஒன்றை புலம்பரம் பகுதிக்கு மாற்றியதால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், புதிதாக திறக்கப்பட்ட அந்த மதுக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் கடையின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. சிசிடிவி கேமரா சேதமடைந்தது.
இதையடுத்து, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில், மதுக்கடை மீது பைக்கில் வந்த 3 சிறுவர்கள் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசிய புலம்பரம் பகுதியை சேர்ந்த 3 சிறுவர்களையும் போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அனுமதித்தனர்.
English Summary
Children hurl petrol bomb at liquor store