கடந்த ஆண்டில் மட்டும் இவ்வளவு பேரா?! ஜோதிமணி எம்பி கேள்விக்கு மத்திய அரசு அளித்த அதிர்ச்சி பதில்!
Central Govt replies question of congress MP jothimani
புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வதையடுத்து, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள் குறித்து எழுப்பிய கேள்விக்கு, மத்திய அரசு பதில் அளித்துள்ளது. பெண்களிடையே புற்றுநோய் ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், கடந்த ஆண்டில் மட்டும் 712,758.பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் எனவும்
குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும், இதுகுறித்து தேசிய சுகாதார திட்டம் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து ஜோதிமணி தெரிவித்துள்ளதாவது, "மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் நிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்தக்கூடிய மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை குறித்த விழிப்புணர்வு செய்வது, புற்றுநோய் சிகிச்சைக்காக குறிப்பிட்ட சில நகரங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தை களைய மாவட்டம் மற்றும் இராமப்புற மருத்துவ கட்டமைப்புகளை வலுப்படுத்துவது, முதலான நடவடிக்கைகளை கொண்ட புற்றுநோய்க்கு எதிரான ஒருங்கணைந்த திட்டத்தை உருவாக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்
English Summary
Central Govt replies question of congress MP jothimani