10 பேரை பயங்கரவாதிகளாக அறிவித்தது மத்திய அரசு! - Seithipunal
Seithipunal


உபா  சட்டத்தின்கீழ் (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம்) 10 பேரை பயங்கரவாதிகளாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ தொய்பா மற்றும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் என்று, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

பயங்கரவாதிகளின் விவரம் பின்வருமாறு :

* பாகிஸ்தானை சேர்ந்த ஹபிபுல்லா மாலிக் என்ற சஜித் தத் - இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை கையாண்டவன்.

* காஷ்மீரின் பாரமுல்லாவை சேர்ந்த பசிட் அகமது ரேஷி (பாகிஸ்தான்) - காஷ்மீரில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு திட்டமிட்டு கொடுத்தவன்.

* காஷ்மீரின் சோபோரை சேர்ந்த இம்தியாஸ் அகமது கான்டூ என்ற சஜத் (பாகிஸ்தான்) - பயங்கரவாதிகளுக்கு நிதியுதவிக்கு ஏற்பாடு செய்தவ.

* பூஞ்ச் பகுதியை சேர்ந்த ஜாபர் இக்பால் என்ற சலிம் (பாகிஸ்தான்) - காஷ்மீரில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் செய்தவன்.

* புல்வாமாவை சேர்ந்த ஷேக் ஜமீல் உர் ரகுமான் என்ற ஷேக் சஹாப் (பாகிஸ்தான்) - பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டவன்.

* ஸ்ரீநகரை சேர்ந்த பிலால் அகமது பெய்க் என்ற பாபர் - பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டவன்.

* பூஞ்ச் பகுதியை சேர்நத் ரபிக் நய் என்ற சுல்தான் - பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டவன்.

* தோடா பகுதியை சேர்ந்த இர்ஷாத் அகமது என்ற இத்ரீஸ் - பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டவன்.

* குப்வாரா பகுதியை சேர்ந்த பஷிர் அகமது பீர் என்ற இம்தியாஸ் - பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டவன்.

* பாரமுல்லா பகுதியை சேர்ந்த சவுகத் அகமது ஷேக் என்ற சவுகத் மோச்சி (பாகிஸ்தான்) - பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டவன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

central government has declared 10 people as terrorists


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->