2027 மார்ச்சில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு! மத்திய அரசு தகவல்! - Seithipunal
Seithipunal


மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி தலைமையில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

அந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சாதிவாரி விவரங்களுடன் கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பை முற்றிலும் வெளிப்படையாக நடத்தும் உறுதியில் மத்திய அரசு உள்ளது என தெரிவித்தார்.

இதையடுத்து, 2027 ஆம் ஆண்டு மார்ச் 1 முதல் நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது இரண்டு கட்டமாக நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முந்தைய சாதிவாரி கணக்கெடுப்பு 2011ல் நடைபெற்றது. 2021ல் நடைபெற வேண்டிய கணக்கெடுப்பு, கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்டது.

எனவே 16 ஆண்டுகளுக்குப் பிறகு, மக்கள்தொகையை அடிப்படையாக வைத்து திட்டமிடல், நிதியளிப்பு, சமூக நீதி போன்றவை செம்மையாக்கப்பட உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Census caste 2027 match


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->