வருத்தம்! ஈடு செய்ய முடியாத பேரிழப்பு...! - முன்னாள் நீதிபதி எம் எஸ் ஜனார்த்தனன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்
irreparable loss Chief Minister condoles passing of former judge MS Janardhanan
திமுக தலைவரும், முதலமைச்சருமான 'மு.க.ஸ்டாலின்' இரங்கல் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார்.அதில் குறிப்பிட்டதாவது,"ஓய்வு பெற்ற நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் உளம் வருந்தினேன்.நீதித்துறையின் மாண்பையும். சீரிய மரபையும் காத்துவந்தவர் என்பதுடன்.

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது அருந்ததியருக்கு 3 விழுக்காடு உள்ஒதுக்கீடு கொண்டுவருவதற்கான பரிந்துரையை அளித்த குழுவின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவராக இருந்த போது, பிற்படுத்தப்பட்டோருக்கான தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான அறிக்கையினையும் தயாரித்து அளித்தவர் ஆவார்.
நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்களின் மறைவு நீதித்துறைக்கு மட்டுமின்றி சமூகநீதி கருத்தியல் தளத்தில் இயங்கும் அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நீதித்துறை சார்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பல அரசியல் தலைவர்கள், மறைந்த எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
irreparable loss Chief Minister condoles passing of former judge MS Janardhanan