வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தினால் இன்சூரன்ஸ் கிடையாது - உச்சநீதிமன்றம் அதிரடி!
car accident insurance sc order
வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டி விபத்தில் உயிரிழந்த நபருக்கு இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்க தேவையில்லை என்ற கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை, உச்சநீதிமன்றம் தற்போது உறுதி செய்துள்ளது.
இந்த விவகாரம் 2014 ஜூன் 18ஆம் தேதியன்று நடந்தது. என்.எஸ். ரவிஷா என்றவர், தனது குடும்பத்துடன் காரில் பயணம் செய்தபோது, அவர் ஓட்டிய வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அவர் மட்டும் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.
அவரது வாரிசுகள், உயிரிழப்புக்கான இழப்பீடு பெற நீதிமன்றத்தை நாடினர். வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், **அந்த விபத்து ரவிஷாவின் கவனக்குறைவு மற்றும் அதிக வேகம்தான் காரணம்** எனத் தெரிவித்தது. அதன்பேரில், இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இழப்பீடு கோர முடியாது என்றும், வாரிசுகள் தகுதி பெறவில்லை என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றமும் முழுமையாக ஏற்று, இனி இதுபோன்ற விபத்து சம்பவங்களில் ஓட்டுநரின் தவறு நிரூபிக்கப்பட்டால், இழப்பீடு கிடைக்க வாய்ப்பில்லை என்ற உயர்நீதிமன்ற நிலைப்பாட்டுக்கு வலுவூட்டியுள்ளது.
English Summary
car accident insurance sc order