கர்நாடகா || பள்ளிக்கு தங்கையை அழைத்துச் சென்ற அண்ணன்.! விபத்தில் இருவரும் உயிரிழந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் தங்கையை பள்ளிக்கு அழைத்து சென்ற போது ஏற்பட்ட விபத்தில் அண்ணன்-தங்கை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கடபல்லா பஜிநந்தா பகுதியை சேர்ந்த நிஷாந்த். இவர் கல்லூரியில் படித்து வந்தார். இவர் தனது தங்கையான 5-ம் வகுப்பு மாணவி மோக்‌ஷாவை இன்று ஸ்கூட்டரில் பள்ளிக்கு அழைத்து சென்றார்.

அப்பொழுது சூலியா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் மீது திடீரென ஸ்கூட்டர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் நிஷாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் நிஷாந்தின் தங்கை படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே மோக்‌ஷாவும் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Brother and sister died in accident in Karnataka


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->