பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற வங்காளதேசத்தை சேர்ந்தவர் கைது.! - Seithipunal
Seithipunal


சர்வதேச எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற வங்காளதேசத்தை சேர்ந்த நபரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

பஞ்சாபின் அமிர்தசரஸ் செக்டாரில் உள்ள ரஜதல் எல்லைப் பகுதியில் நேற்று இரவு வழக்கமாக எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சர்வதேச எல்லை வழியாக பாகிஸ்தானிலிருந்து ஒரு நபர் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றுள்ளார். இதைப்பார்த்த எல்லை பாதுகாப்பு பாடையினர் அந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். பின்பு அந்த நபரை கைது செய்தனர்.

இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் வங்காள தேசத்தை சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு, பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எல்லை பாதுகாப்புப்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bangladeshi Man arrested for Trying To Enter India From Pak Side


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->