ஓடும் ரயிலில் பிறந்த குழந்தை! மஹாலக்ஷ்மி என பெயர் வைத்த முஸ்லீம் தம்பதி!! - Seithipunal
Seithipunal


கோலாலம்பூர் - மும்பை செல்லும் மகாலட்சுமி விரைவு ரயிலில் பிறந்த குழந்தைக்கு முஸ்லிம் தம்பதிகள் மகாலட்சுமி என்று பெயரிட்டுள்ளனர்.

கோலாலம்பூர் டு மும்பை செல்லும் மகாலட்சுமி விரைவு ரயிலில் பாத்திமா என்ற நிறைமாத கர்ப்பிணி முஸ்லிம் பெண் அவரது கணவர்யுடன் பயணம் மேற்கொண்டுள்ளார். ரயில் சென்று கொண்டிருந்தபோது பாத்திமாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதை எடுத்து செய்வதறியாத கணவர் தவித்துக் கொண்டிருந்தபோது பாத்திமாவுக்கு ரயில் நிலைய குழந்தை பிறந்துள்ளது.

இந்த தகவலை அறிந்த ரயில்வே துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு தாயையும் குழந்தையும் மீட்டு  மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும் நலமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோலாலம்பூர் டு மும்பை செல்லும் மகாலட்சுமி விரிவு ரயிலில் குழந்தை பிறந்ததால் ரயிலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மகாலட்சுமி என பெயரிட்ட சம்பவம் மத நல்லிணக்கம் எடுத்துக்காட்டுவதாக பலர் கூறி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Baby A Muslim couple named Mahalakshmi


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->