அறிவிக்கப்பட இருந்த விருதுகள் ரத்து…! சாகித்ய அகாடமியில் வெடித்த சர்ச்சை...! - Seithipunal
Seithipunal


தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பல மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில், ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும், ஆனால் தன்னாட்சி அமைப்பாக கருதப்படும் சாகித்ய அகாடமி, இலக்கிய உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களின் பெயர்கள் நேற்று அறிவிக்கப்படவிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் மத்திய கலாச்சார அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், அந்த அறிவிப்பு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது. தேர்வு செயல்முறையில் அமைச்சகம் திருப்தி அடையவில்லை என்பதே இதற்குக் காரணமாக தெரிவிக்கப்படுகிறது.

விருது பெற்றவர்களின் பட்டியலை சாகித்ய அகாடமியின் நிர்வாகக் குழு ஏற்கனவே அங்கீகரித்திருந்த நிலையில், நேற்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவிருந்த பத்திரிகையாளர் சந்திப்பு, சில நிமிடங்களுக்கு முன்பே ரத்து செய்யப்பட்டது. அரசு பிரதிநிதிகள், “விருது பெற்றவர்களின் பெயர்களை தற்போது வெளியிட வேண்டாம்” என அகாடமி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சாகித்ய அகாடமியின் ஒரு உறுப்பினர்,“நிர்வாகக் குழு விருது பெற்றவர்களின் பட்டியலை ஒப்புதல் அளித்த பிறகும், அரசு பிரதிநிதிகள் அதை நிறுத்தி வைக்கச் சொன்னார்கள். விருது பெற்றவர்களின் பின்னணியை மீண்டும் சரிபார்க்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய விதிமுறைகளின் கீழ் விருதுகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும், அதன்படியே விருது பெறுவோர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால், தன்னாட்சி அமைப்பாக செயல்பட்டு வந்த சாகித்ய அகாடமியின் நடவடிக்கைகளில் மத்திய அரசு நேரடியாக தலையிடுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடைசி நிமிடத்தில் விருது அறிவிப்பை முடக்கிய அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து, “இலக்கியத்தின் சுதந்திரம் அரசியல் தலையீட்டால் பாதிக்கப்படுகிறது” என குற்றம்சாட்டி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

awards that announced cancelled Controversy erupts Sahitya Akademi Awards


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->