மும்பையில் அதிர்ச்சி - 17 வயது சிறுவனை 5 துண்டுகளாக வெட்டிய ஆட்டோ ஓட்டுநர் கைது..!
auto driver arrested for kill seventeen years old boy in mumbai
மும்பையில் அதிர்ச்சி - 17 வயது சிறுவனை 5 துண்டுகளாக வெட்டிய ஆட்டோ ஓட்டுநர் கைது..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரில் செம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷபீக் அகமது ஷேக். ஆட்டோ ஓட்டுநரான இவருடைய மனைவி மற்றும் சகோதரியுடன், அதேபகுதியைச் சேர்ந்த ஈஸ்வர் அவாத் என்பவர் சகோதரனைப் போல நீண்ட காலமாக பழகி வந்துள்ளார்.

இதற்கிடையே, ஈஸ்வர் திடீரென காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக ஷேக்கின் மாமனார், காவல் துறையில் புகார் அளித்ததின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஈஸ்வரை தேடி வந்த நிலையில், ஈஸ்வர் கடைசியாக ஷேக்குடன் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ஷேக்கைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, ஷேக் ஈஸ்வரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதுடன், தனது மனைவி மற்றும் மைத்துனர் குறித்து அடிக்கடி புகார் கூறியதால் குத்திக் கொன்றதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் ஈஸ்வரின் உடல் குறித்து விசாரித்த போது, ஈஸ்வரனின் உடல் செம்பூரில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பதாக தெரிவித்தார்.
அதன் படி போலீஸார், சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த போது ஈஸ்வர் அங்குள்ள சமையலையில் ஐந்து துண்டுகளாக வெட்டி கூறுபோட்ட நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் ஈஸ்வர் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் ஷபீக் அகமது ஷேக் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரைக் கைது செய்து, இந்தக் கொடூரக்கொலைக்கு வேறு காரணங்கள் ஏதாவது இருக்கிறதா? என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 17 வயது சிறுவனைக் கொன்று, ஐந்து துண்டுகளாக வெட்டி கூறுபோட்ட சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
auto driver arrested for kill seventeen years old boy in mumbai