அசாமில் முதல் திருமணத்தை விவாகரிக்காமல் இரண்டாவது திருமணம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை! - Seithipunal
Seithipunal


அசாம் சட்டப்பேரவையில் புதிய முறை “கவுகாத்தி” சட்டம்,அசாமில், முதல் திருமணத்தை சட்டப்படி விவாகரிக்காமல் இரண்டாவது திருமணம் செய்யும் நபர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

இந்த புதிய சட்டத்தின் படி, பலதார திருமணங்களில் ஈடுபடும் நபர்கள் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை, கூடுதலாக கடுமையான அபராதத்திற்கு உள்ளாகுவார்கள்.

தொடர்ந்து குற்றத்தை மீண்டும் செய்தால், சிறை மற்றும் அபராதம் இருமடங்காக உயர்க்கப்படும்; குறிப்பாக, இரண்டாவது திருமணம் செய்தவர்கள் இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1.5 லட்சம் வரை அபராதம் அனுபவிப்பார்கள்.

இதன் பிறகு அவர்கள் அரசு வேலைக்கு தகுதி இழக்கும், அரசு நிதி உதவி மற்றும் மானியம் கிடைக்காது. மேலும், பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாது.அதே சமயம், இந்த சட்டம் அசாம் மாநிலத்தின் ஆறாவது அட்டவணைப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் பகுதிகள் போடோலாந்து, கர்பி அங்லாங் மற்றும் வடக்கு கச்சார் ஹில்ஸ் போன்ற பகுதிகளில் அமல்படுத்தப்படமாட்டாது.

அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா பேசியபடி, “இந்த சட்டம் அனைத்து மதத்தினருக்கும் சமமாகும். சிலர் நினைக்கும் போல முஸ்லிம்களுக்கு எதிராக அல்ல. வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால், பொதுச் சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவேன். இது எனது உறுதிமொழி,” என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Assam if marry second time without divorcing your first marriage you imprisoned 10 years


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->