வங்கக் கடலில் உருவாகிறது "அசானி" புயல்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் நிக்கோபார் தீவுகளை நோக்கி நகர்ந்து வருவதால், அங்கு அதி கனமழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில் வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதியானது இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை புயலாக வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு 'அசானி' என்று பெயரிடப்பட்டுள்ளது.இதன் காரணமாக அங்கு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அசானி புயல் உருவாகவுள்ள நிலையில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால், உடனடியாக கரை திரும்புமாறு மீனவர்களுக்கு இந்திய கடலோர காவல்படை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, ஹெலிகாப்டர் மூலம் சென்று நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களுக்கு இந்திய கடலோர காவல்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

"Asani" storm is developing in the Bay of Bengal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->