மீண்டும் அதிகரிக்கும் கெரோனா வைரஸ் பாதிப்பு.. விமான சேவை ரத்து.!
Air india stopped Hongkong to india flight service
உலகளவில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விமான போக்குவரத்து சேவையில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்துவரும் நிலையில், இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் பயணத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழுடன் வரவேண்டும் என ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.
இதன் காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால், ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 23ஆம் தேதி ஹாங்காங்கில் இருந்து இந்தியா வரும் விமான சேவை ரத்து செய்யப்படுவதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
English Summary
Air india stopped Hongkong to india flight service