முதன் முறையாக ரபேல் விமானங்களின் பாகங்களை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்து..!
Agreement signed to manufacture Rafale aircraft parts in India for the first time
பிரான்ஸின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனமும், டாடா நிறுவனமும் இணைந்து ரபேல் போர் விமான பாகங்களை இந்தியாவில் தயாரிக்க, ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரபேல் விமானங்களை இந்தியா ஏற்கனவே வாங்கியுள்ளது. விமானப்படையில் 36 ரபேல் விமானங்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், தற்போது கடற்படைக்கும் ரபேல் விமானங்களின் தேவையாகியுள்ளது.
சமீபத்தில் ரூ.63 ஆயிரம் கோடியில் 26 ரபேல் விமானங்களை கடற்படைக்காக வாங்வதற்கான ஒப்பந்தம், இந்தியா- பிரான்ஸ் இடையே கையெழுத்தானது. உள்நாட்டு, வெளிநாட்டு ஆயுத சந்தைகளுக்காக ஹைதராபாத்தில் உற்பத்தி மையம் தொடங்கப்படவுள்ளது. வரும் 2028-ஆம் ஆண்டு முதல் உற்பத்தி பணிகள் தொடங்கப்படும் என்றும், போர் விமானங்களின் முன், பின் பகுதிகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைக்கு இது ஒரு பெருமையான தருணம் என்றும், இந்தியாவின் வளர்ச்சியை இது பிரதிபலிக்கிறதாகவும், இந்தியாவின் வெற்றி பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் இது குறிக்கிறது என்றும் கூறியுள்ளனர்.
அத்துடன், இந்தியாவிலேயே ரபேல் போர் விமானங்களின் பாகங்களை தயாரிப்பதால் நிறைய வேலை வாய்ப்பு உருவாகும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் ரபேல் போர் விமானங்கள் முக்கிய பங்கு வகித்த நிலையில் ரபேல் போர் விமான பாகங்களை இந்தியாவில் தயாரிக்க, ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Agreement signed to manufacture Rafale aircraft parts in India for the first time