அக்னிபாத் திட்டம் | மொத்தம் 3,03,328 விண்ணப்பங்கள் - அமோக வரவேற்பு.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு கடந்த 14-ம் தேதி அக்னிபாத் திட்டத்தின் கீழ், 17 ½ வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் முப்படைகளில் சேர்ந்து 4 ஆண்டுகள் பணியாற்றும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. மேலும், இந்த திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 

ஆனால் இந்த திட்டத்தை திரும்ப பெற மத்திய அரசு மறுத்து விட்டது. இந்த நிலையில், ராணுவம் அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியில் சேரும் நடைமுறையை மேற்கொண்டுள்ளது. 

இதனை தொடர்ந்து இந்திய கடற்படையில் சேருவதற்கு இதுவரை மொத்தம் 3,03,328 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Agnipath Project 3 Lakhs applications Overwhelming response


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->