அமர்நாத் யாத்திரைக்கு ஆதார் கட்டாயம்.! ஜம்மு காஷ்மீர் நிர்வாகம்.! - Seithipunal
Seithipunal


அமர்நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு ஆதார் அங்கீகாரம் கட்டாயம் என்று ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தெற்கு ஜம்மு காஷ்மீர் இமயமலையில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது அமர்நாத் குகை கோவில். இங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடை காலத்தில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா பெரும் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அமர்நாத் யாத்திரை நடைபெறவில்லை. இதையடுத்து தொற்று குறைந்துள்ளதால் வருகின்ற ஜூன் 30 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை அமர்நாத் புனித யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அமர்நாத் குகை கோவிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்கு அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் யாத்திரை வரும் பக்தர்கள் ஆதார் அட்டையை வழங்க வேண்டும் அல்லது தாமாக முன்வந்து ஆதார் அங்கீகாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Aadhar compulsory in Amarnath yatra


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->