8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..! தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை... நீதிமன்றம் அதிரடி...! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முருகேஷ்(32). இவர் அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியிடம் சாக்லேட் கொடுப்பதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் வந்துள்ளார். பின்பு அங்கு வைத்து சிறுமியை முருகேஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து சிறுமி இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக முல்பாகல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் முருகேஷை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோலார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்த முருகேஷுக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூபாய் 50,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் ஒன்பது லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A worker who raped an 8 year old girl was sentenced to 30 years prison in Karnataka


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->