டேட்டிங் செயலி மூலம் ஆண் நண்பர்களுக்கு வலைவீச்சு; அந்தரங்க படங்கள், வீடியோக்களை எடுத்து மிரட்டி ரூ.6 கோடி சுருட்டிய கில்லாடி பெண்..!
A woman in UP who met boyfriends through a dating app and made Rs 6 crores
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்ற யுவதி டேட்டிங் ஆப் மூலம் பல ஆண்களை ஏமாற்றி இதுவரை 06 கோடிக்கும் மேல் சுருட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்போனில் டேட்டிங் செயலி மூலம் பல ஆண்களிடமிருந்து பணத்தைப் பறித்து விட்டதாகக் கூறி வழக்கறிஞர் ஒருவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் வழக்கு தொடுத்துள்ள நிலையில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த பல்லவி சிங் ராஜ்புத் சமூக வலைதளங்கள் மற்றும் டேட்டிங் செயலி மூலம் நட்பு ஏற்படுத்திக் கொண்டு ஆண் நண்பர்களுடன் உரையாடி வந்துள்ளார். அவர்களுக்கு தனது அந்தரங்கமான புகைப்படங்களையும், வீடியோக்களையும் அனுப்பி ஆசையை தூண்டியுள்ளார்.

அதன் பின்னர் குறித்த ஆண்களை நேரில் வரவழைத்து அவர்களுடன் அந்தரங்கமான முறையில் படங்கள் மாறும் வீடியோவை எடுத்து வந்துள்ளார். பின்னர் அந்த ஆதரங்களை வைத்து அவர்களை பிளாக்மெயில் செய்து பணம் பறிப்பதாக வழக்கறிஞர் தனது புகாரில் கூறியுள்ளார்.
இதுவரை பல ஆண் நண்பர்களிடம் பழகி அவர் ரூ.6 கோடிக்கும் மேல் சுருட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உடனடியாக அந்தப் பெண் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
போலீஸ் நடத்திய விசாரணையில் பல்லவி சிங், பொய்யான புகார்களைக் கொடுத்து 05 பேரை சிறைக்கு அனுப்பி இருப்பதும் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள பல்லவி சிங் ராஜ்புத், அவரது 02 பெண் உதவியாளர்கள், ஒரு ஆண் உதவியாளர் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
English Summary
A woman in UP who met boyfriends through a dating app and made Rs 6 crores