பதைப்பதைக்கும் சம்பவம்! 4 வயது சிறுவன் மீது டிராக்டர் மோதியதில் பலி...!
A shocking incident A 4year old boy was killed when a tractor hit him
தெலுங்கானாவில் நல்கொண்டா மாவட்டம் தெலுவரிகுடம் கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 4 வயதில் 'மோக்சித்' என்ற மகன் இருந்தார்.

இந்நிலையில், நேற்று தம்பதி தங்கள் மகனுடன் அருகேயுள்ள சூர்யபேட் மாவட்டம் நிமிகலு டங்கு என்ற கிராமத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றுள்ளனர்.
இதனிடையே, உறவினர்கள் அனைவரும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகேயுள்ள கோவிலில் நின்றுகொண்டிருந்தனர். அச்சமயம், சிறுவன் மோக்சித் திடீரென கோவில் அருகேயுள்ள சாலையை கடக்க முயன்றுள்ளான்.
அப்போது சாலையில் வந்த டிராக்டர் ஒன்று, சிறுவன் மீது மோதியது. இந்த சம்பவத்தில் சிறுவன் மோக்சித் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதானபமாக உயிரிழந்தான்.
இச்சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து மேற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
A shocking incident A 4year old boy was killed when a tractor hit him