ரூ.50 ஆயிரம் கடனுக்காக நண்பனிடம் மனைவியை விற்ற கணவன்!
A husband sold his wife to a friend for a loan of Rs. 50,000
ரூ.50,000 கடனுக்காக மனைவியை நண்பரிடம் 'விற்ற' கணவர் சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தை அடுத்து உள்ள கன்வான் காவல்நிலையப் பகுதியில் ஒரு பெண், தனது கணவர் மீது மிகக்கடுமையான குற்றச்சாட்டுடன் புகார் அளித்திருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகாரின்படி, கணவர் சூதாட்டத்துக்கு அடிமையாகி, அதிகளவான கடனில் சிக்கியுள்ளார். இதனால், கடனை அடைக்க ரூ.50,000 வாங்கிய நண்பரிடம், தனது மனைவியை உடல் உறவுக்காக கட்டாயப்படுத்தினார் என அவர் தெரிவித்துள்ளார்.
உடனடியாக இந்தூர் மகளிர் காவல் நிலையத்தில் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் தார் பகுதியில் நிகழ்ந்ததால், போலீசார் அதை ‘பூஜ்ய எப்.ஐ.ஆர்’ (Zero FIR) என பதிவு செய்தனர்.பின்னர் வழக்கு தார் காவல்துறைக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து கணவர் மற்றும் அவரது நண்பர் இருவரும் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களை கைது செய்ய தீவிர தேடுதல் தொடங்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
English Summary
A husband sold his wife to a friend for a loan of Rs. 50,000