தொடரும் சோகம்.. ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் தவிப்பு.!
5-year-old boy fell into a borehole is distressed
மத்திய பிரதேசம் மாநிலத்தில் 5 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் பீட்டல் மாவட்டம் மாண்டவி கிராமத்தில் 5 வயது சிறுவன் தனது வீட்டிற்கு பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்தப் பகுதியில் சரியாக மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் சிறுவன் தவறி விழுந்தார். இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சிறுவனை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பேரிடர் மீட்புப் படையினரும் அங்கு விரைந்து வந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
5-year-old boy fell into a borehole is distressed