நின்ற லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து - 2 சிறார்கள் உட்பட 5 பேர் பலி, 13 பேர் காயம்
5 Killed 13 Injured After Car Rams Into Truck In Karnataka Yadgiri
கர்நாடக மாநிலத்தில் நின்றிருந்த லாரிமிகு கார் மோதிய விபத்தில் இரண்டு சிறார்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் உள்ள அத்மகுட் தாலுகாவின் வெள்ளகுடா கிராமத்தை சேர்ந்த 18 பேர் காரில் கர்நாடக மாநிலம் கலபுரகியில் நடைபெற்ற உருஸ் திருவிழாவில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது யாதகிரி மாவட்டத்தில் உள்ள பலிசக்ரா அருகே சென்ற போது தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர விபத்தில் காரில் பயணம் செய்த இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 13 பேர் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் உயிரிழந்த 5 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர்கள் முனீர் (வயது 40), நியாமத் உல்லா (40), முதாசிர் (12), சும்மி (12), ரமீஜா பேகம் (50) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
5 Killed 13 Injured After Car Rams Into Truck In Karnataka Yadgiri