16 வயது சிறுமியை திருமணம் செய்த 47 வயது நபர்.. போலீசார் தேடுதல் வேட்டை.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள மலைப்பகுதியில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக குழந்தைகள் நல குழும அதிகாரிகளுக்கு புகார் கிடைத்தது. இதனையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்றனர்.

அங்கு சென்று விசாரணை நடத்தியதில் இடமலையார் பகுதியில் குழந்தை திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. மேலும் 16 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 47 வயது தொழிலாளி திருமணம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்படி திருமணம் ஆன 47 வயது தொழிலாளி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் அவருக்கு இரண்டு குழந்தைகளும் இருந்த நிலையில் 16 வயது சிறுமியை அவர் திருமணம் செய்துள்ளார்.

இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். இதனை அடுத்து 16 வயது சிறுமியை திருமணம் செய்த தொழிலாளியை பிடிக்க அவர் தங்கி இருந்த கிராமத்திற்கு சென்றனர்.

 போலீசார் தேடுவதை அறிந்த அவர் சிறுமியுடன் தலைமறைவாகியுள்ளார். இந்த நிலையில் தற்போது சிறுமியையும் திருமணம் செய்த 47 வயது நபரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் ‌


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

47 year's old man married in 16 years girl in kerala


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->