தென்னிந்தியாவில் இருந்து செல்லும் 24 ரெயில்கள் ரத்து - ரெயில்வே துறை அறிவிப்பு.!
24 train service cancelled southern railway infor
தென் இந்தியாவில் இருந்து செல்லும் 24 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
"கோவை - நிஜாமுதின் கொங்கு விரைவு ரெயில் டிச.31, ஜன.7 தேதிகளிலும், மறுமாா்க்கமாக ஜன.3, 10 தேதிகளிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படும். திருநெல்வேலி - பிலாஸ்பூா் இடையே இயக்கப்படும் விரைவு ரெயில் டிச.31, ஜன.7 தேதிகளிலும், மறுமாா்க்கமாக ஜன.2, 9 தேதிகளிலும் ரத்து செய்யப்படும்.

கேரளத்தின் கொச்சுவேலி, எா்ணாகுளத்தில் இருந்தும் பெங்களூரில் இருந்தும் உத்தர பிரதேசம், பீகார், சத்தீஸ்கா் மாநிலங்களுக்குச் செல்லும் ஹம்சாபா், ராப்திசாகா் உள்ளிட்ட 24 விரைவு ரெயில்கள் டிச.30 முதல் ஜன.13-ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படும்.
மேலும் டெல்லியில் இருந்து சென்னை சென்டிரல் வரும் கரீப் ரத் அதிவிரைவு ரெயில் ஜன.1, 8 தேதிகளில் வாராங்கல், விஜயவாடா, ஓங்கோல் வழியாக வருவதற்கு பதிலாக பெத்தப்பள்ளி, நிஷாமாபாத், காச்சிக்கூடா, ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும்.
இதேபோல், சென்னை சென்டிரல் - பிலாஸ்பூா் இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரெயில் (எண்:12851/12852) விஜயவாடா வழியாக இயக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
24 train service cancelled southern railway infor