ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.!
2 terrorist killed army
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது புல்வாமாவின் ஷுவ்லான் என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.