மதுரா கிருஷ்ணர் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு 2 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணர் பிறந்த ஊராக கருதப்படும் உத்தரபிரதேசம் மாநிலம் மதுராவில் கொண்டாட்டங்கள் களைகட்டியது.

அதன்படி, மதுராவில் உள்ள பாங்கே பிஹாரி கிருஷ்ணர் கோவிலில் நள்ளிரவு கொண்டாடங்கள் நடைபெற்றது. அதில் பங்கேற்க அதிக அளவு பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.

அப்போது வழிபாட்டின் போது கோவிலுக்குள் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு 2 பக்தர்கள் உயிரிழந்தனர். 

மேலும் 6 பேர் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 devotees killed in Mathura Krishna temple crowd jam


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->