கடும் பனி - டெல்லியில் 150 விமானங்கள் தாமதம்.! 
                                    
                                    
                                   150 flight service delay for snow fall
 
                                 
                               
                                
                                      
                                            இந்தியாவில் தற்போது குளிர்காலம் நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் கடும் குளிரும், பனிப்பொழிவும் நிலவுகிறது. இதன் காரணமாக டெல்லியில் இன்று மட்டும் 150-க்கும் மேற்பட்ட விமானங்களும் சுமார் 26 ரெயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து டெல்லி சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளதாவது:- "அடர்ந்த மூடு பனி காரணமாக விமான புறப்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் சுமார் 41 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

டெல்லியில் காற்றின் தரக்குறியீடு இன்று காலை 6 மணி அளவில் 408 ஆக பதிவானது. இது மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் கூற்றுபடி, மிகவும் மோசமானது என்பதிலிருந்து கடுமையானது என்ற வகைக்கு மாறியுள்ளது.
மேலும், டெல்லியில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 6 முதல் 20 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதன்படி இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 9.6 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது.
வட இந்தியாவில் கடந்த சில வாரங்களாக அடர்ந்த மூடுபனி காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் மற்றும் ரெயில்கள் ரத்து மற்றும் தாமதமாக இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
                                     
                                 
                   
                       English Summary
                       150 flight service delay for snow fall