15 வயது சிறுமி நடந்த கொடூரம்: ஓடும் காரில் 02 முறை பாலியல் பலாத்காரம்..! - Seithipunal
Seithipunal


அரியானாவில்10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தன்னுடைய சகோதரனை பள்ளியில் விடுவதற்காக சென்றுள்ளார். 15 வயதுடைய குறித்த சிறுமி சகோதரனை பள்ளியில் விட்டு, விட்டு அவருடைய பள்ளிக்கு மாணவி புறப்பட்டுள்ளார். அப்போது ஓரத்தில் நின்றிருந்த கார் ஒன்றில் இருந்த நபர் ஒருவர் கதவை திறந்து அந்த மாணவியை காருக்குள் இழுத்து போட்டுள்ளார்.

பின்னர் அங்கிருந்து அந்த காரை ஒருவர் ஓட்ட, மற்றொரு நபர் அந்த சிறுமியை 02 முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அத்துடன், அந்த மாணவியை அதனை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என அச்சுறுத்தியுள்ளார். மேலும், காருக்குள்ளையே அந்த மாணவியை வைத்திருந்து, பள்ளி முடியும் நேரத்தில், அந்த சிறுமியை அவருடைய கிராமத்தின் அருகே, காரில் இருந்து வெளியே தள்ளி விட்டு, அவர்கள் தப்பியுள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்த சிறுமி மெதுவாக வீட்டுக்கு சென்று நடந்த கொடூரங்களை குடும்பத்தினரிடம் கூறியியுள்ளார். இதனை தொடர்ந்து அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து குற்றவியல் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

15 year old girl raped twice in a moving car


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->