கொரோனாவிற்கு மருந்து இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு! நமது மருந்தகங்களில் எளிதாக கிடைக்கும்!
Medicine for corona virus announced by trump
உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்காத நிலையில், தற்போது பயன்பாட்டில் இருக்கும் இரண்டு மருந்துகளை ஒன்றாகச் சாப்பிட்டால் இந்த நோயை கட்டுப்படுத்தலாம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் 12000 த்தினை நெருங்கி விட்டது. இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உலக அளவில் 3 லட்சத்தை நெருங்கி விட்டது.
இந்த நிலையில் இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வந்த மருத்துவ உலகிற்கு, தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அசித்ரோமைசின் மற்றும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் ஆகிய இரண்டு மருந்துகளை ஒன்றாக சேர்ந்து பயன்படுத்தினால் நோயை கட்டுபடுத்த முடியும் அதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ட்வீட்டில் தெரிவித்துள்ளதாவது,
English Summary
Medicine for corona virus announced by trump