காலையில் டீ காப்பிக்கு பதிலாக இந்த வடிநீர் குடியுங்கள்..!
Karpooravalli tea
பெரும்பாலானோருக்கு காலையில் காப்பி அல்லது டீ இல்லை என்றால் நாள் முழுமனதுடன் ஆரம்பிக்காது. ஆனால், தற்போது டீ காப்பிக்கு மாற்றாக பல மூலிகை டீக்கள் உள்ளன. தற்போது கற்பூரவல்லி டீ எப்படி செய்வது என பார்போம்.
தேவையான பொருட்கள்:
கற்பூரவல்லி இலைகள் - கைப்பிடி
துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
டீத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
பனங்கற்கண்டு அல்லது தேன் – தேவைக்கு

செய்முறை:
கற்பூரவல்லி இலைகளை நன்றாக கழுவி கொள்ளவும். ஒருபாத்திரத்தில் ஒரு பாத்திரத்தில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதில் நறுக்கிய கற்பூரவல்லி இலைகள், துருவிய இஞ்சி, டீத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்ததும் அதில் உங்கள் தேவைகேற்ப பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து பருகவும்.

கற்பூரவல்லியில் உள்ள நன்மைகள்:
இதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமி சி அதிக அளவில் உள்ளது. கற்பூரவல்லி இலைகளில் தினமும் இரண்டு சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.