தமிழகத்தில் இன்று முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் இருந்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக கடந்த மாதம் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு சில கட்டுப்பாடுகளுடன் ஊடங்கை அறிவித்து.

தற்போது, கொரோனா பரவல் அதிகளவில் இருப்பினும், அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கடந்த 27 ஆம் தேதி தமிழக அரசு விலக்கிக் கொண்டு, பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி அளித்தது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று முதல் செயல்பட உள்ளது. 

பள்ளிகளை பொருத்தவரையில் முதலில் 10 முதல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மட்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இன்று திறக்கப்படும் அனைத்து பள்ளிகளிலும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், மாணவர்களின் கல்வித்தரம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதால், அதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today all school and college open


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->