தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை? பள்ளிக் கல்வித்துறை ஆணையர் விளக்கம்.! - Seithipunal
Seithipunal


ஒரு நாளிதழில், தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படுவதாக செய்தி வெளியானது. இதற்க்கு மறுப்பு தெரிவித்து, பள்ளிக் கல்வித்துறை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். 

இது குறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பதாவது,

"தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும். தமிழ்நாடு அரசு தன்னுடைய மொழிக்கொள்கையை பல்வேறு காலகட்டங்களில் தெளிவுபடுத்தி உள்ளது. 

தாய்மொழியாகிய தமிழ், உலகத்திற்கான இணைப்பு மொழியாக ஆங்கிலம் என இருமொழிக் கொள்கை மட்டுமே வழக்கத்தில் இருந்து வருகிறது. 

நாளிதழில் வந்த செய்திபோன்று, மூன்றாவது மொழி, மும்மொழிக் கொள்கை தமிழகத்தில் அமல்படுத்தப்படுகிறது என்ற கருத்து முற்றிலும் தவறானது. அதுபோன்று எந்த நடவடிக்கையும் அமல்படுத்தப்படவில்லை, அனுமதிக்கப்படவும் இல்லை. இருமொழிக் கொள்கைதான் அமல்படுத்தப்படுகிறது. 

எனவே, தமிழ்நாடு அரசால் ஐயமற தெளிவுபடுத்தப்பட்ட மொழிப் பாடக்  கொள்கை குறித்து உண்மைக்குப் புறம்பாக மக்களை தவறாக வழிநடத்தும் செய்திகளை நம்ப வேண்டாம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN School Education department annouses language issue


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->