தமிழகத்தின் 7 மாவட்ட மக்களுக்காக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது மாணவர் சேர்க்கை ஆனது நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வுகள் நடைபெற்று வரக் கூடிய நிலையில் அதிகப்படியான மாணவர்கள் விண்ணப்பித்து இருக்கக்கூடிய காரணத்தால் 20 சதவீத இடங்களை அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுருந்தது.

தற்போதைய நிலையில் சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருக்ககூடிய இடங்களுடைய எண்ணிக்கை என்பது 92 ஆயிரம் இடங்களாக இருக்கிறது. 92 ஆயிரம் இடங்களுக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து இருக்கக்கூடிய காரணத்தால் வசதி இருக்கக்கூடிய கல்லூரிகளில் 20 சதவீத இடங்களை அதிகரித்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கி இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் 7 மாவட்டங்களில் புதிதாக 7 அரசு கலை கல்லூரிகள் துவங்க நடவடிக்கை எடுக்க மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதன்படி, கோவை, கரூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், விருதுநகர், நாகை, அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் புதிய கல்லூரிகள் துவங்கப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tn government order new college in seven district


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->