சூப்பர் பா! இரு மடங்காக அதிகரித்த மாணவ சேர்க்கை... சென்னை மாநகராட்சி பள்ளிகளில் குவியும் மாணவர்கள்!!!
Student enrollment has doubled Students flocking to Chennai Corporation schools
கடந்த ஏப்ரல் 25ம் தேதி முதல் தமிழகத்தில், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த கோடை விடுமுறையான 36 நாட்களுக்குப்பின் தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

மேலும், பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ-மாணவிகள் காலை முதலே பள்ளிகளில் ஏராளாமானோர் குவிந்த வண்ணம் காணப்படுகிறது.
இந்நிலையில், நடப்பு ஆண்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவ-மாணவியர் சேர்க்கை இரு மடங்காக பெருகியுள்ளது.
குறிப்பாக கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 6000 மாணவ-மாணவியர் புதிதாக சேர்ந்தனர். ஆனால், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் இதுவரை 16,490 மாணவ-மாணவியர் சேர்ந்துள்ளனர்.
இதில் சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவியர் சேர்க்கை வெகுவாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Student enrollment has doubled Students flocking to Chennai Corporation schools