அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 16-ஆம் தேதி தொடக்கம்..!
Quarterly examinations for government and government aided schools to begin on September 16
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி தொடங்கும் இந்த பள்ளி காலாண்டு தேர்வுகள் 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. தேர்வுக்குப் பிறகு செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் அக்.04 வரை காலாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 2026-2027 ஆம் கல்வியாண்டில் 01 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது. காலாண்டுத் தேர்வு 16-ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு நடைபெறுவதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையில் குறிப்பிட்ட நாட்களில் அந்தப் பாடத்திற்கு தேர்வினை நடத்த வேண்டும்.
9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரையிலும், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் தேர்வு நடைபெறும். மேலும் செப்டம்பர் 16 - தமிழ், செப். 17 - ஆங்கிலம், செப். 18 - விருப்பப்பாடம், செப். 21 - கணக்கு, செப். 22 - உடற்கல்வி, செப். 23 - அறிவியல், செப்.24 - சமூக அறிவியல் தேர்வுகள் நடத்தப்படும்.''என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Quarterly examinations for government and government aided schools to begin on September 16