தேசிய புலனாய்வுத் துறையில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? - Seithipunal
Seithipunal


தேசிய புலனாய்வு துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் படி விண்ணப்பித்து பயன்பெறலாம்.

வயது வரம்பு:- 18 முதல் 27 வரை. வயது தளர்வு உண்டு.

கல்வித்தகுதி: இப்பணியிடங்களுக்கு எலெக்ட்ரானிக்ஸ்/ எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்/ எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன்/ எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ்/ தகவல் தொழில்நுட்பம்/ கணினி அறிவியல்/ கணினி பொறியியல்/ கணினி பயன்பாடு ஆகியவற்றில் பொறியியல் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

* எலெக்ட்ரிக்கல்/கணினி அறிவியல்/ இயற்பியல்/ கணிதம் ஆகியவற்றில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு (B.Sc) அல்லது கணினி பயன்பாட்டில் இளங்கலை பட்டப்படிப்பு (BCA) முடித்திருக்க வேண்டும்.

அடிப்படை சம்பளம்: ₹25,500 முதல் அதிகபட்சம் ₹81,000 வரை

சிறப்பு பாதுகாப்புத் தொகையாக அடிப்படை சம்பளத்தில் கூடுதலாக 20% வழங்கப்படும். விடுமுறை நாட்களில் பணியாற்றினால் தனியாக கூலி வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: 
1.எழுத்துத் தேர்வு (Written Exam)

2.திறன் தேர்வு & நேர்காணல் (Skill Test & Interview)

3.மருத்துவ பரிசோதனை (Medical Examination)

முதலில் இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் தற்காலிகமாகவே பணியமர்த்தப்படுவார்கள். இருப்பினும், நிர்வாக விதிமுறைகளுக்கு ஏற்ப பணி நிரந்தரம் செய்யப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:- இந்தப் பணிக்கான விண்ணப்பத்தை https://www.mha.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுகொள்ளலாம். விண்ணப்பம் ஆகஸ்ட் 23 தேதியே தொடங்கிய நிலையில், செப்டம்பர் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacancy in Intelligence department


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு


செய்திகள்



Seithipunal
--> -->