அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடல் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.! - Seithipunal
Seithipunal


அரசு பள்ளிகளில் பதினோராம் வகுப்புகளில் தொழில்கல்வி பாடப்பிரிவுகளை மூட கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு பள்ளிகளில் தொழில்கல்வி பாடப்பிரிவுகளை மூட வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு கல்வித்துறை முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் பதினோராம் வகுப்புகளில் தொழில்கல்வி பாடப்பிரிவுகளை உடனடியாக மூட வேண்டும். ஏற்கனவே அப்பிரிவுகளில் மாணவர்களை சேர்த்திருந்தால் அந்த மாணவர்களை வேறு பிரிவுகளுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

தொழில்கல்வி பாடப்பிரிவுகளில் மாணவர்களின் சேர்க்கை குறைவு மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் இந்த முடிவு ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11th std class vocational education cancel in tamilnadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->