மீண்டும் 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான வினாத்தாள்கள் லீக்..!
10th and 12th question paper leak
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை பொதுத் தேர்வுக்கு முன்னதாக தயார்படுத்தும் வகையில் திருப்புதல் தேர்வு நடைபெறுகிறது. நேற்று பத்தாம் வகுப்பிற்கு அறிவியல் பாடத்திற்கான திருப்புதல் தேர்வும், 12 ஆம் வகுப்பு கணிதம் படத்திற்கான திருப்புதல் தேர்வு நடைபெற்றது.
ஆனால், நேற்று முன் தினம் 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வு விடைத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக திருவண்ணாமலையில் பள்ளிகளில் ஏதேனும் ஒன்றிலிருந்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு விடைத்தாள்கள் செல்போனில் புகைப்படம் எடுக்கப்பட்டு லீக்காகி இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இதுதொடர்பாக செய்யாறு காவல் துறையில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் புகார் அளித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், துறை ரீதியான விசாரணை மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராம வர்மா ஆணையிட்டுள்ளார்.
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். 10, 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று 10ம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் பிப்.17 ஆம் தேதி நடைபெறும் ஆங்கிலப் பாட வினாத்தாள்களும் முன்கூட்டியே வெளியாகியுள்ளது.
English Summary
10th and 12th question paper leak