திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விதிகள்..!
marriage dates
திருமணம் என்பது ஒரு சமூக, சட்ட, உறவுமுறை அமைப்பு ஆகும். கணவன் - மனைவி இருவரும் அடுத்தடுத்த ஜென்மங்களிலும் மனம் ஒத்து வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் அதனை ஆயிரம் காலத்துப் பயிர் என்று குறிப்பிட்டனர். திருமணம் செய்யவேண்டிய நாட்கள், மாதங்கள் குறித்து ஜோதிட சாஸ்திரங்கள் பல்வேறு விதிகளை கூறுகிறது.
முதல் விதி :
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பௌர்ணமி ஒரே மாதத்தில் வருவது.
இரண்டாவது விதி :
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
மூன்றாவது விதி :
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது.
நான்காவது விதி :
புதன், வியாழன், வெள்ளி போன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல. ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்னங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும்.
ஐந்தாவது விதி :
துவிதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது நல்லது.
ஆறாவது விதி :
முகூர்த்த லக்கினத்திற்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.
ஏழாவது விதி :
அக்னி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலக்கட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.
எட்டாவது விதி :
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்திற்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.
ஒன்பதாவது விதி :
திருமண நாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.
பத்தாம் விதி :
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் திருமணம் செய்யக்கூடாது.